Tuesday 6 June 2017

தமிழகம் தமிழனுக்கானது!!! தென்றல் வீசுமா???

தமிழகம் தமிழனுக்கானது... இது உண்மையான உணர்வா? அல்லது சுயநல வெறியா? தாங்களே முடிவில் உணர்வீராக...

உணர்வு என்பதோ "வாழ வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும். நன்றாக வாழ வேண்டும்". வெறி என்பதோ "நல்ல வாழ்ந்தே ஆக வேண்டும்". சுயநல வெறி என்பதோ "தான் தற்பொழுது நன்றாக வாழவேண்டும்".

தமிழ், தமிழன் ஆதியில் தோன்றின எனக்கூறும் நாம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருத்தல் வேண்டும். ஆதியில் தோன்றியவர்கள் நம் முன்னோர்கள் எனில், இன்றைக்கு உலகம் அடைந்திருக்கும் அனைத்து முன்னேற்றம் மற்றும் வேறுபாடுகளுக்கு நம் முன்னோர்களின் பெருந்தன்மையொன்றிய வாழ்நெறியே காரணம் என்பதை உணர முடிகிறது. நாம் தான் முன்னோடி எனில், தற்பொழுது இருக்கும் வேற்றுமைகளை உருவாக்கியதும் நாமே என்பதை மறுக்க முடியாது. உலகம் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இயங்குவதாக கூறுவர். அந்த புள்ளி நாம் எனில், தற்பொழுது நிகழும் நன்மை, தீமை அனைத்தும் நம்மாலே என்பதை மறுக்க கூடாது. அதில் தீமையை கலைய இயன்றதை முயல வேண்டுமே தவிர, நன்மையின் மீது கரைபடிய அல்ல.

தமிழகம் என்பது தமிழனின் அகம் என்பதை அடியேன் அறிவேன், மறவேன். மேலும் இது தற்போதைய அகம் என்பதனையும் உணர வேண்டும். ஏனெனில் நம் முன்னோர்களின் அகம் பல என ஒரு கூற்று உலாவி கொண்டிருக்கிறது (தற்போதைய இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும் நம் முன்னோர்களின் தடம் இருப்பதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது). நம் அகம் மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது என அடியேன் போற்றுகிறேன்.

நான் கூறவருவது யாதெனில், "தமிழனை தமிழன் ஆள வேண்டும்  என்ற தகுதியைவிட, தமிழ் உணர்வுள்ளவன் ஆள்வதே சிறப்பின் மிகுதி". இங்கே உணர்வென்பது ஒருவரின் கடந்தகால மொழி, இனம் போன்ற மக்கள் மனநிலை சார்ந்த நிகழ்வுகளில் நெருக்கத்தினையே குறிக்கிறது. மக்கள் மனநிலையினை பிரதிபலிப்பனவாக இருத்தலே சுருக்கம்.

நம்முடைய சிந்து நதிக்கரை தேசத்தில் 'நம்மை பிரிப்பது எந்தவொரு எல்லைகளுமல்ல. விழி மறைக்கும் சுயநல வெறியே சார்ந்த சாதி, மதமே'.

சாதி மற்றும் மதம் என்பதில் அடியேன் பார்வையானது...

"இவை அனைத்தும் தலைமை மனநிலை வேறுபாட்டின்பால் ஏற்பட்ட போட்டி முடிவின் விளைவே. அதன் தொடரில் இன்றோ தலைமையாக இருக்க வேண்டும் என்ற சுயவெறியே இவ்வேறுபாட்டினை மேலும் வலிமைபடுத்தி முன்னோக்கி நகர்கிறது". இன்றைய வேற்றுமை உணர்வானது நாளை உற்றாரிடமே உருவாகி வாழ்வின் வசந்தத்தை வழிப்பறி செய்யும் என்பதில் ஐயமேதுமில்லை. இவையாவும் தெளிவுபடுத்துவது யாதெனில், "அனைத்து வகையிலும் உன்னத உணர்வே உத்தம சிந்தையுடன் விந்தையில் இன்பம் தரும் வல்லமை கொண்டது"

நல்லவர்களும், தீயவர்களும் இல்லா இடமுண்டோ?

"உணர் வெறி கரமே போற்றி
சதிவெறி  விதியை மாற்றி
தமிழ் திலகமிடு தமிழா...

நம்மக ஒலி உலக ஒளியாய்
விழிமுன் வழியாய் மலர

முன்னோரின் புகழ்நறுமணம் பூலோகம் நுகர 
அடியேனின் வழியினை பரிசீலிப்பீராக!!!!

மதமொன்றே தமிழன்
இனமொன்றே திராவிடன்
உணர்வுமொன்றே இந்தியன்...

ஆண் பெண் உணர்வொன்றிய சாதியிரண்டு
குறை மிதை போக்கும் நிரையென வகுப்பு மூறுண்டு

மனிதனாய் மலர்ந்து வாழ்ந்து
உணர்வே மொழியென உறவாடி 
இன்பகடலில் சுதந்திர மீனாக துடுப்பெய்த 
அடியேனின் வழியினை பரிசீலிப்பீராக!!!

தமிழன் என்ற வெறியினால் மட்டும் ஒன்றுபடுவாயெனில், சுயநலவெறியுடன் கொண்ட பலபண்பும் இரண்டற உருண்டு புரண்டு கலங்கத்திற்கு பஞ்சமின்றி வஞ்சனையை நிந்தனை செய்யும்.

உதாரணத்திற்கு.....

ஈழத்தினை கொண்டு முன்னெடுக்கும் அரசியல் இன்றுவரை தொடருகிறாதே. ஏதும் மாற்றமுண்டோ?

சீமான் கருத்தின்படி, அன்புமணி மற்றும் திருமாவளவன் போன்றவர்களை தமிழ் தலைவர்கள் என கொண்டோமெனில், ஈழப்படுகொலை இரத்தக்கரையில் இவர்களின் கரம் ஒட்டுமொத்த தமிழினித்திற்கும் எதிராக இருந்த காங்கிரஸ் கையுடன் உறவாடியதை மறுக்க முடியுமா? அதே கணம் விடுதலை புலிகளுக்கு ஆதரவுகரம் மட்டுமின்றி நிதியையும் வழங்கிய MGR போன்றவரை தமிழ் தலைவனாக மறுப்பதே முரணாக உணரமுடிகிறது.

கூறவரும் கூற்று யாதெனில், MGR போன்ற தமிழ் உணர்வாளனை உச்சமாகவும், அன்புமணி மற்றும் திருமாவளவன் போன்ற தமிழர்களை மிச்சமாகவும் கொண்டு இருகரம்(உச்சம்,மிச்சம்) இணைந்து ஆள்வதன் மூலம் நம் முன்னோர்களின் சிரம் மேலும் உயர்ந்து, புகழ் பூலோகம் முழுவதும் போற்றப்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இலக்கிய வரியின் செய்முறையினை உலகமறியும்.

தமிழ்நாட்டில் தமிழன் என்ற மதத்தினை முன் மொழிந்து ஆண் மற்றும் பெண் என்ற இரு சாதியை உருவாக்கி, வறுமை,நடுத்தரம் மற்றும் வளம் என வருமானத்தின் அடிப்படையில் மூன்று வகுப்புகளாக உரித்து தாம்தான் முன்னோடி என உலகத்திற்கு நம் கொடியினை உயர்த்துவோமாக...

இதன்பால் என் ஆதரவு தற்பொழுது ரஜினிக்கு அல்ல என்பதனை மேலும் தெளிவுபடுத்துகிறேன். கடந்த காலத்தில்  அவர் நம் மக்களின் உணர்வோடத்தில் பயணிக்கவில்லை. அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்க இரண்டு தசாப்தமெடுப்பவர் இவர்??????

இன்றைக்கும்  காவேரி, முல்லை பெரியாறு போன்ற நதிநீர் சார்ந்த தமிழ் மக்களின் உணர்வில் இவரின் நிலைபாடு என்னவென   யாருமறியா?

இக்கட்டுரையில் தமிழ் தவறு இருப்பின் சுட்டிக்காட்டுவதனை அடியேன் வரவேற்கிறேன்.


- கவியரசன் தங்கப்பன்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து ...