Monday 25 December 2017

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: நிழல் நிஜமானது, இராஜ்ஜியம்?

ஆர்.கே.நகரில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் தொகுதிக்கு பல போராட்டங்களிடையே இடைத்தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்தல் முடிவில் ஜெயலலிதாவின் பெயர், கழகம் மற்றும் வெற்றி சின்னம் எனக்கூறப்படும் இரட்டை இலையுடன் தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணி நாற்பாதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவின் பெயரைமட்டும் வைத்துக்கொண்டு சுயேட்சையாக களம் கண்ட தினகரனிடமும் அவரது வியூகத்தாலும் தோல்வியை தழுவியது. திமுக டெபாசிட் இழந்து 13% வாக்குகளை மட்டுமே பெற்றது. நிழல் நிஜமானால் ராஜ்ஜியம் எவ்வழியினாயினும்(+ or -) சரித்திரத்தில் இடம்பெறும் என்பர். சசிகலாவின் பயணத்தில் இதற்கு முக்கிய பங்கு உண்டு. 

இத்தேர்தல் முடிவில் அறியமுடிவது யாதெனில்....

  • திமுக வின்அரசிற்கெதிரான இராஜ தந்திரமான திட்டம் வெற்றியை பெற்றது.
  • நிழல் அரசியல்வாதியை நிஜ அரசியல்வாதியாக அரசியல் மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
  • தமிழக அரசியலில் தினகரன் தனக்கான இருப்பிடத்தை வலிமையாக துவக்கியுள்ளார்.
  • ஜெயலலிதாவின் பெயர், கழகம் மற்றும் சின்னம் வைத்துள்ள முதல்வர் அணியானது தனது வருங்கால அரசியல் அணுகுமுறையை சுயமுடிவில் தெளிவோடு முன்னெடுக்க கொடுக்கப்பட்ட மணியோசை.
  • பாரதத்தை ஆளும் கட்சியான பாஜக தன்னிலை அறிந்து கட்சியினை வளர்க்க மக்களின் போக்குடன் இணைந்து செயல்பட வேண்டும்.
  • நாம் தமிழரின் உரிமை குரளுக்கு மக்களிடம் மரியாதை உருவாகியுள்ளது.
திரு.தினகரனின் வெற்றியென்பது....
  • ஒற்றைத்தலைமையாக சுயமாக முடிவெடுத்து அதன் வழிதழுவிய முதுமையான அணுகுமுறைக்கான வெற்றி.
  • சமூக தளங்கள் முதல் ஆர்.கே.நகர் தேர்தல் களம் வரையிலான தினகரன் ஆதரவாளர்களின் கடினமான தேர்தல் உழைப்பிற்கான வெற்றி.
  • பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பொதுமக்களிடம் அணுகும் அசாதாரண முதிர்ந்த அணுகு முறை.
  • சூழ்நிலைகளுக்கேற்ப வியூகம் அமைத்து, அதற்கேற்ப அனைவரையும் கவரும் அரவணைப்புடன் கூடிய சகிப்புத்தன்மை.
  • ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகளையும் அரசியல் போலி தன்மையையும் தனக்கு சாதகமாக வசீகரம் செய்துள்ளார்.
  • தன்நிலையை மாற்றாமல் விடாபிடியாக வியூகத்துடன் போரிடுதல் மற்றும் தன்னை நம்பி வருபவர்களுக்கு பாதுகாப்பு அரணை முன்னேற்பாட்டுடன் அமைத்தல்.
மொத்தத்தில் எது எங்கு தேவையென அறிந்து மக்களின் வாக்கினை கவர்ந்ததே அவரின் வெற்றி. இவையாவும் காந்தியை மீறிய பார்வையே...

இதன் விளைவு தமிழ்நாடு முழுவதும் பரவுமா என்பது திரு.தினகரனை வளர்த்த அவர்களின் அரசியல் எதிரிகளிடமே உள்ளது....

-கவியரசன் தங்கப்பன்

No comments:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து ...