Monday 24 July 2017

காலச்சக்கரத்தில் தமிழக கழக முகவுரை

தட்பவெப்பம் அறியா கடுமையான ஏற்றத்தாழ்வு சூழலில் ஒளியினை வழங்கி தன் பரிமாணத்தை விளக்கி நம்மகம் உதித்ததே நீதியின் வழிவந்த உதய சூரியன். இச்சூரிய ஒளியே மனிதனின் வாழ்நெறியென்றால் மிகையல்ல.

சிந்து நதி தேசத்திற்கே தன் ஒளியினை வழியாக வடிவமைத்தது இந்த உதய சூரியன். பின்னர் காலச்சக்கரத்தில் சில நிகழ்வுகளால் தீமை கனலின் தாக்கம் அதிகமாகியதின் விளைவில்,  இலை முளைத்து பசுமை வழங்கி மக்களிடம் செழித்தது.



இலையின் இரண்டு தலைகளும் தண்டிற்காக(தொண்டனிற்காக), தண்டினால்(தொண்டனால்), தண்டினை(தொண்டனை) பலமாகவும் கரமாகவும் கொண்டு வளர்ந்து உதிர்ந்தது. இன்று இலையின் தண்டு மட்டும் தடமறியா வினோத காற்றின் அலையில் கலங்கி நிற்கிறது. ஆனால் சூரியனில், கதிரொளி பல சிதறலுடன் பரந்து விரிந்து பிறப்பிடமறியாமல் மிளிருகிறது.




சூரியனுக்கும், இலைக்கும் மாற்றாக முரசு முழங்க தொடங்கிய அதே நேரத்தில் பழம், மலர் போன்றவையும் போட்டியிட்டது. ஆனால் மக்களோ, சூரியனும் இலையும் போதுமானது என்று மித்த சிந்தனையில் ஒத்த கருத்தாக உதிர்த்துவிட்டனர்.

பழம் ஒரே வகுப்பினை சார்ந்ததால் அதன் சுவையானது பலதர மக்களிடம் வரவேற்பை இழந்தது. அதாவது, மாமரத்தை மட்டுமே சார்ந்ததால் சுவைவிரும்பா மக்கள் திசை மாறி அதனை ஒதுக்கிவிட்டனர். 

முரசின் முழக்கமானது பல இரைச்சலை ஏற்படுத்தியது.அதாவது தெளிவற்ற ஒலியை மக்களுக்க வழங்கியதால் மக்களால் வெறுக்கப்பட்டது.

மலரின் நறுமணம் சில வகுப்பினரிடையே துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் மக்களிடம் வெறுப்பினை ஏற்படுத்தியது.

கால சக்கரத்தின் கடைசியில்(2016), மக்கள் தீர்ப்பில் இலைக்கு முதலிடமும் சூரியனுக்கு இரண்டாம் இடமும் வழங்கி வெப்பமும் பசுமையுமே வேண்டுமென மற்றவர்களை துடைத்தெறிந்துவிட்டனர்.



இன்றோ, குருடன் வீட்டில் திருடன் புகுவது போன்று, இலையுதிர்ந்த காட்டில் தண்டினை சிதறடிக்கும் பணியில் மலரின் வேலை முன்னேறுகிறது. ஆனால் மறுபுறம் முழங்கிய முரசு சூரிய வெப்பத்தின் தாக்கத்தால் முனங்ககூட இயலாத நிலையில் உள்ளது. பழமானது வெம்பிய நிலையிலிருந்து உள்ளகம் ஊடுருவ விதை தூவி வருகிறது. பிற ஆவியை விட காவியை கோரமானது என்பதையாவும் மக்களும் அறிவார். 



இன்றல்ல...நேற்றல்ல...என்றுமே...

தட்ப வெப்ப காலத்தில் உதித்த சூரியன் பெருங்கிளையுடன் தேடலுகிடமின்றி கதாநாயகானவும் அதன் வெப்பத்திற்கு உதிர்ந்து முளைக்கும் பசுமை வாடாத இலையே மாற்று கதாபாத்திரம் என மக்களின் குருதியோட்டம் இறுதியில் அரங்கேற்றம் நிகழ்த்தும் என்பதே என் சிந்தையில் வரும் ஒளி.

-கவியரசன் தங்கப்பன்


Thanks to google for image copyright.

No comments:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து ...