Saturday 27 January 2018

தமிழக பேருந்து கட்டண உயர்வு: மக்களை திசைதிருப்பும் முயற்சியா?

தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு என்பது மக்களின் மீது பிரயோகிக்கப்பட்ட பலமான அஸ்திரமே. பேருந்து கட்டண உயர்விற்கு  பல காரணங்கள் இருப்பினும் எதிர்ப்பு என்ற ஒற்றைக்கருத்தே முன்னிலை பெறுகிறது.

இந்த விலை உயர்வானது மக்களினை திசைதிருப்புவதற்கானதாக இருக்கலாம் என்ற பல பார்வையும் வலுவாகிறது. அதாவது, கட்டண உயர்வுக்கான யூகங்களாக அறிய முடிவது யாதெனில்,

பல்வேறு அரசியல் குழப்பங்களால் விசையறியா திசைகளில் செய்வதறியாது ஆளும்  தலைவர்கள் மற்றும் எதிர்க்கும் தலைவர்கள் யாரென அறியமுடியாமல் மக்கள்  குழம்பியுள்ளனர். குழம்பிய குட்டையில் பாஜக, ரஜினி, கமல் போன்றோர் மீன் பிடிக்க வலை விரித்துள்ளனர். ஆளுங்கட்சியினர் பாஜக ஊடுருவிய அதிமுக வா? அதிமுக யார்? அதிமுக வின் அதிகார தலைமை யார்? திமுக மற்றும் தினகரனின் வசைகளுக்கான பதிலுரை? இது போன்ற பல வினாக்களினை மூழ்கடிக்கும் எண்ணமோ என தோன்றுகிறது. "எதிர்ப்பினை சம்பாதிப்பது எளிது. அதன்மூலம் பிரபலமடைந்து மக்களின் மறதியை பயன்படுத்தி ஏற்றமாக்க இயலும் என்பது வரலாறு. ஆட்சிப்பிழைகள் மக்களிடம் விரைவில் சென்றடையும். ஆனால் மறைந்துவிடும். நன்மைகள் சென்றடைய தாமதமானாலும் எளிதில் அழிக்க இயலாது. இவையாவும் பிழைகளுக்கு மட்டுமே துரோகத்திற்கல்ல". விலையேற்றத்தில் சிறுது குறைத்தாலும் ஆட்சியாளரின் நோக்கம் எளிதில் நிறைவேறும். பொறுத்திருந்து பார்க்கலாம். விலையேற்றத்தில் மாற்றம் வருமாயின் என் பார்வை தெளிவானதாகும். மேலும் அதிமுக மற்றும் தமிழக அரசியலில் பல மாற்றங்களை காண முடியும். எனினும் இந்த எதிர் போராட்டத்தின் மூலம் அதிமுகவின் தலைமையை திமுக போன்ற எதிர்கட்சிகள் இலவச பிரச்சார விளம்பரம் மூலம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது எனது தீர்க்கமான முடிவு.

அடுத்ததாக....

டீசல் போன்ற எரிபொருள்களின் கடுமையான விலையேற்றத்தினை மாநில அரசின் நிதிகொண்டு சீர்செய்ய இயலாத சூழ்நிலை. மாநில அரசின் கடுமையான நிதி நெருக்கடி நிலையினை கருதமுடிகிறது. நிதி நெருக்கடிக்கான முக்கிய காரணிகளாக GST, மத்திய அரசின் நிதி குறைப்பு(இயற்கை சீற்றங்களுக்கான் நிதி, மாநில அரசிற்கான நிதி ...), பல்வேறு அரசியல் குழப்பத்தால் வருவாய இழப்பு போன்ற பல வரிசைபடுத்த இயலும். கடுமையான நிதி நெருக்கடியில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 100% உயர்வு என்பது சத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. விவாதத்திற்காக வினோதமான எதிர்ப்பினை இறுதியில் எதிர்கட்சி அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் கொண்டு செல்லாமல் தவறியது எதிர்கட்சியில் மிகப்பெரிய தீர்மானிக்கப்பட்ட தோல்வி. மேலும் நிதி நெருக்கடியை ஆளும்தரப்பு மத்தியிடம் பெற இயலா தன்மையை மறுக்க இயலாது.

மேலும் பல காரணங்கள்...

போக்குவரத்து மேலாண்மை மற்றும் புதிய பேருந்து வாங்குதல், ஊழியர்களுக்கான சம்பளம் என பல சம்பிரதாய காரணங்கள் அடுக்க இயலும்.

சற்றுமுன் பேருந்து கட்டண உயர்வு குறைப்பதாக அறிவிப்பு வெளியாகி என் முதல் யூகத்தினை உறுதிபடுத்தியுள்ளது.

No comments:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து ...