Saturday 27 January 2018

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி தஞ்சையில் பல சிற்ப்புவாய்ந்த திட்டங்களை அறிவித்து உள்ளனர். அதன்படி, அவர்களது சமூக வலைதளம் மூலம் பெற்ற தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவையை பின் அளவீடாக அறிய பயன்படும் என்பதால் இப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

நெல் இரகத்திற்கு பெயரிடுதல்

1) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு புதியதாக வெளியிடப்பட்ட நெல் இரகத்திற்கு “எம்.ஜி.ஆர் 100” என சற்று முன்னர் பெயரிட்டு, அந்த ரக நெல்லை பயனாளிக்கும் வழங்கினேன்.

பள்ளியை தரம் உயர்த்துதல்

2) கும்பகோணம் நகரத்தில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் படித்த யானை அடி நகராட்சி தொடக்கப் பள்ளியானது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.  மேலும் அப்பள்ளிக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவுப் பள்ளி என்றும் பெயர் சூட்டப்படும். அப்பள்ளியில் சத்துணவு வழங்கப்படவில்லை என்பதை அறிந்தவுடன், மாண்புமிகு அம்மாவின் அரசு, சத்துணவு திட்டத்தின் பிதாமகன் புரட்சித்தலைவர் அவர்கள் படித்த பள்ளியில் உடனடியாக சத்துணவு மையம் தொடங்க ஆணையிட்டது. இங்கேயே சத்துணவு சமைக்க தனி சமையலறை கட்டப்படும்.

புதிய கால்நடை கிளை நிலையம்

3) திருபணந்தாள் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருவோணம் ஒன்றியத்தில் கிழமங்கலம் ஆகிய கிராமங்களில் இரண்டு புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்

4) கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் வல்லம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில் தலா 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளுமாக ஐந்து கிடங்குகள் நபார்டு வங்கி உதவியுடன் ஏற்படுத்தப்படும்.

5) பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மின்னணு ஏலமுறை மென்பொருள் வசதி, மின்னணு ஏலக்கொட்டகை, பொதுவான வகைப்படுத்தும் கருவிகள் மற்றும் எடைமேடை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். (1.02 கோடி ரூபாய்). 

மின் வசதிகள்

6) தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் மின் விநியோகத்தை மேம்படுத்தும் பொருட்டு, பந்தநல்லூரில் புதிய துணை மின் நிலையம் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

7) மின் நகரில் புதிய 110/11 கி.வோ. துணை மின்நிலையம் 5.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

8) திருமலை சமுத்திரத்தில் புதிய 110/33-11  கி.வோ. துணை மின்நிலையம் 10.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

9) 110/11 கி.வோ. பூண்டி துணை மின் நிலையம், 2.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

10) 110/11 கி.வோ.  ஊரணிபுரம் துணை மின் நிலையம் 2.12 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

11) தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்தில் புதியதாக கணினி முறையில் மின்தடை பழுது நீக்கும் மையம் 44.95 இலட்சம்  ரூபாய் செலவில் நிறுவப்படும்.

12) பட்டுக்கோட்டைக்குட்பட்ட பேராவூரணி உப கோட்ட அலுவலகம் 35.00 இலட்சம் ரூபாய் செலவில் பேராவூரணி கோட்ட அலுவலகமாக மாற்றி அமைக்கப்படும்.

ரெகுலேட்டர் அமைத்தல்

13) கும்பகோணம் வட்டம், கும்பகோணம் நகரத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே மைல் 57/7-ல் நடைபாலத்துடன் கூடிய ரெகுலேட்டர் அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

தளமட்டச் சுவர்கள் அமைத்தல்

14) கும்பகோணம் வட்டம், சுந்தரப் பெருமாள் கோயில் கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே மைல் 52/3-4ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (5.30 கோடி  ரூபாய்).

15) திருவிடைமருதூர் வட்டம், பவுண்டரிகாபுரம் கிராமத்தில் மாங்குடி வாய்க்காலுக்கு நீர் வழங்கும் பொருட்டு கீர்த்திமன்னார் ஆற்றின் குறுக்கே மைல் 63/1-2ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (4 கோடி  ரூபாய்).

தடுப்பணைகள் அமைத்தல்

16) ஒரத்தநாடு வட்டம், தாலயமங்களம் கிராமத்தில் தாலயமங்களம் ஏரி வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.60 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்(50 லட்சம்  ரூபாய்).

17) ஒரத்தநாடு,வண்ணான்கொல்லைபட்டி கிராமத்தில் பனங்குளம் உபரி நீர்போக்கின் குறுக்கே எல்.எஸ்.2.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.(70 லட்சம்  ரூபாய்).

18) ஒரத்தநாடு, தோப்பு விடுதி கிராமத்தில் வண்ணான்வாரியின் குறுக்கே எல்.எஸ்.0.100 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.(60 லட்சம்  ரூபாய்)

19) ஒரத்தநாடு வட்டம், அருமலை கிராமத்தில் அருமலை வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.250 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (50 லட்சம்  ரூபாய்)

20) ஒரத்தநாடு வட்டம், வெள்ளூர் மற்றும் தொண்டாரம்பட்டு கிராமங்களில் பட்டுவானாச்சி வடிகாலின் குறுக்கே முறையே எல்.எஸ்.6.50 கி.மீ மற்றும் எல்.எஸ்.11.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (95 லட்சம்  ரூபாய்)

மருத்துவ வசதிகள்

21) தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3.28 கோடி  ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

இவையாவும் அறிப்பாக(Announced on December'2017 last week in Thajavur) மட்டுமில்லாமல் திட்டமாக செயல்படுத்தி மக்களிடம் நடைமுறைபடுத்தப்பபடுகிறாத என பொறுத்திருந்து அறிய ஆவல்.


தமிழக பேருந்து கட்டண உயர்வு: மக்களை திசைதிருப்பும் முயற்சியா?

தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு என்பது மக்களின் மீது பிரயோகிக்கப்பட்ட பலமான அஸ்திரமே. பேருந்து கட்டண உயர்விற்கு  பல காரணங்கள் இருப்பினும் எதிர்ப்பு என்ற ஒற்றைக்கருத்தே முன்னிலை பெறுகிறது.

இந்த விலை உயர்வானது மக்களினை திசைதிருப்புவதற்கானதாக இருக்கலாம் என்ற பல பார்வையும் வலுவாகிறது. அதாவது, கட்டண உயர்வுக்கான யூகங்களாக அறிய முடிவது யாதெனில்,

பல்வேறு அரசியல் குழப்பங்களால் விசையறியா திசைகளில் செய்வதறியாது ஆளும்  தலைவர்கள் மற்றும் எதிர்க்கும் தலைவர்கள் யாரென அறியமுடியாமல் மக்கள்  குழம்பியுள்ளனர். குழம்பிய குட்டையில் பாஜக, ரஜினி, கமல் போன்றோர் மீன் பிடிக்க வலை விரித்துள்ளனர். ஆளுங்கட்சியினர் பாஜக ஊடுருவிய அதிமுக வா? அதிமுக யார்? அதிமுக வின் அதிகார தலைமை யார்? திமுக மற்றும் தினகரனின் வசைகளுக்கான பதிலுரை? இது போன்ற பல வினாக்களினை மூழ்கடிக்கும் எண்ணமோ என தோன்றுகிறது. "எதிர்ப்பினை சம்பாதிப்பது எளிது. அதன்மூலம் பிரபலமடைந்து மக்களின் மறதியை பயன்படுத்தி ஏற்றமாக்க இயலும் என்பது வரலாறு. ஆட்சிப்பிழைகள் மக்களிடம் விரைவில் சென்றடையும். ஆனால் மறைந்துவிடும். நன்மைகள் சென்றடைய தாமதமானாலும் எளிதில் அழிக்க இயலாது. இவையாவும் பிழைகளுக்கு மட்டுமே துரோகத்திற்கல்ல". விலையேற்றத்தில் சிறுது குறைத்தாலும் ஆட்சியாளரின் நோக்கம் எளிதில் நிறைவேறும். பொறுத்திருந்து பார்க்கலாம். விலையேற்றத்தில் மாற்றம் வருமாயின் என் பார்வை தெளிவானதாகும். மேலும் அதிமுக மற்றும் தமிழக அரசியலில் பல மாற்றங்களை காண முடியும். எனினும் இந்த எதிர் போராட்டத்தின் மூலம் அதிமுகவின் தலைமையை திமுக போன்ற எதிர்கட்சிகள் இலவச பிரச்சார விளம்பரம் மூலம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது எனது தீர்க்கமான முடிவு.

அடுத்ததாக....

டீசல் போன்ற எரிபொருள்களின் கடுமையான விலையேற்றத்தினை மாநில அரசின் நிதிகொண்டு சீர்செய்ய இயலாத சூழ்நிலை. மாநில அரசின் கடுமையான நிதி நெருக்கடி நிலையினை கருதமுடிகிறது. நிதி நெருக்கடிக்கான முக்கிய காரணிகளாக GST, மத்திய அரசின் நிதி குறைப்பு(இயற்கை சீற்றங்களுக்கான் நிதி, மாநில அரசிற்கான நிதி ...), பல்வேறு அரசியல் குழப்பத்தால் வருவாய இழப்பு போன்ற பல வரிசைபடுத்த இயலும். கடுமையான நிதி நெருக்கடியில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 100% உயர்வு என்பது சத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. விவாதத்திற்காக வினோதமான எதிர்ப்பினை இறுதியில் எதிர்கட்சி அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் கொண்டு செல்லாமல் தவறியது எதிர்கட்சியில் மிகப்பெரிய தீர்மானிக்கப்பட்ட தோல்வி. மேலும் நிதி நெருக்கடியை ஆளும்தரப்பு மத்தியிடம் பெற இயலா தன்மையை மறுக்க இயலாது.

மேலும் பல காரணங்கள்...

போக்குவரத்து மேலாண்மை மற்றும் புதிய பேருந்து வாங்குதல், ஊழியர்களுக்கான சம்பளம் என பல சம்பிரதாய காரணங்கள் அடுக்க இயலும்.

சற்றுமுன் பேருந்து கட்டண உயர்வு குறைப்பதாக அறிவிப்பு வெளியாகி என் முதல் யூகத்தினை உறுதிபடுத்தியுள்ளது.

Monday 8 January 2018

அகிலம் போற்றும் பாரதத்தில் அனைத்தும் இந்தி மயமா?

நம் பாரதத்தை அகிலம் போற்ற மிக முக்கியமான காரணங்களுல் ஒன்று, "பல இனம்,  மதம் , மொழி மற்றும் பல சிறப்புடைய கலாச்சாரங்களைக்கொண்ட  இந்தியன் என்ற ஒற்றை உணர்வு". ஆனால் தற்பொழுது பலமொழியில் ஒரு மொழியினை மறைமுகமாக முன்னிறுத்துவதென்பது மற்றவர்களுக்கு வலியினையும், இந்தியன் என்ற ஒருமித்த உணர்வினையும் சிதைப்பதற்கான வழியாக அமைந்துவிடாதா ஆட்சியாளர்களே??

இன்றை இந்தி திணிப்பு என்பது ஆணவத்துடன் அதிகாரத்தை பயன்படுத்துவதன் வெளிப்பாடாக உணர முடிகிறது.

ஐக்கிய நாடுகளிகளின் சபையில் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த இந்திய அரசு பல கோடி செலவு செய்ய தயாராக உள்ளது. நட்பு நாடுகளின் இசைவின் மூலம் ஐநா வில் நிறைவேற்றும் முயற்சியில் அரசு முன்னோக்கி நகருவதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவின் பாராளுமன்ற பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல மொழி கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் இதன் விளைவு எப்படி அமையும். அனைத்து மொழியினரும் சரிசமமாக வரி செலுத்தும் போது, இந்திக்கு மட்டும் ஏன் வளர்ச்சி?

மற்ற மொழிகளை தாழ்த்தவில்லையென்றால், மற்ற மொழிகளுக்காக செய்த நடுவண அரசின் சலுகைதான் என்ன?

சிலரின் வினாக்கள், இந்தியை முன்னிறுத்துவதால் ஐநா வில் ஆங்கிலம் பயன்படுத்தலாமே? இந்தி ஒருவேளை அங்கீகரிக்கப்பட்டால், இந்திய பிரதிநிதியாக ஆங்கிலம் பயன்படுத்தினால் அது இந்தியாவுக்கும் இந்தியனுக்கும் மனக்கசப்பினை உண்டாக்காதா?

இது போன்ற முயற்சி தமிழ்நாடு, கேரளா  போன்ற மாநிலத்தவரும் இந்தியை கற்க வைப்பது என்பதுதான் அரசின் நரி தந்திரமா?

பல திணிப்பு முயற்சிகளைபோல் இதுவும் தோல்வியில் முடிவதே சிறப்பானதாகும். உலக அரங்கில் இந்தியனாக பெருமைபட இந்தி மொழியைவிட இந்தியன் என்ற உணர்வும் தாய் மொழி வழி ஞானமும் போதுமானதே என்பதை ஆட்சியளர் உணருவதே ஒற்றுமைக்கான நீரோட்டாமாகும். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து ...