நம் பாரதத்தை அகிலம் போற்ற மிக முக்கியமான காரணங்களுல் ஒன்று, "பல இனம், மதம் , மொழி மற்றும் பல சிறப்புடைய கலாச்சாரங்களைக்கொண்ட இந்தியன் என்ற ஒற்றை உணர்வு". ஆனால் தற்பொழுது பலமொழியில் ஒரு மொழியினை மறைமுகமாக முன்னிறுத்துவதென்பது மற்றவர்களுக்கு வலியினையும், இந்தியன் என்ற ஒருமித்த உணர்வினையும் சிதைப்பதற்கான வழியாக அமைந்துவிடாதா ஆட்சியாளர்களே??
இன்றை இந்தி திணிப்பு என்பது ஆணவத்துடன் அதிகாரத்தை பயன்படுத்துவதன் வெளிப்பாடாக உணர முடிகிறது.
ஐக்கிய நாடுகளிகளின் சபையில் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த இந்திய அரசு பல கோடி செலவு செய்ய தயாராக உள்ளது. நட்பு நாடுகளின் இசைவின் மூலம் ஐநா வில் நிறைவேற்றும் முயற்சியில் அரசு முன்னோக்கி நகருவதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவின் பாராளுமன்ற பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல மொழி கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் இதன் விளைவு எப்படி அமையும். அனைத்து மொழியினரும் சரிசமமாக வரி செலுத்தும் போது, இந்திக்கு மட்டும் ஏன் வளர்ச்சி?
மற்ற மொழிகளை தாழ்த்தவில்லையென்றால், மற்ற மொழிகளுக்காக செய்த நடுவண அரசின் சலுகைதான் என்ன?
சிலரின் வினாக்கள், இந்தியை முன்னிறுத்துவதால் ஐநா வில் ஆங்கிலம் பயன்படுத்தலாமே? இந்தி ஒருவேளை அங்கீகரிக்கப்பட்டால், இந்திய பிரதிநிதியாக ஆங்கிலம் பயன்படுத்தினால் அது இந்தியாவுக்கும் இந்தியனுக்கும் மனக்கசப்பினை உண்டாக்காதா?
இது போன்ற முயற்சி தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலத்தவரும் இந்தியை கற்க வைப்பது என்பதுதான் அரசின் நரி தந்திரமா?
பல திணிப்பு முயற்சிகளைபோல் இதுவும் தோல்வியில் முடிவதே சிறப்பானதாகும். உலக அரங்கில் இந்தியனாக பெருமைபட இந்தி மொழியைவிட இந்தியன் என்ற உணர்வும் தாய் மொழி வழி ஞானமும் போதுமானதே என்பதை ஆட்சியளர் உணருவதே ஒற்றுமைக்கான நீரோட்டாமாகும்.
இது போன்ற முயற்சி தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலத்தவரும் இந்தியை கற்க வைப்பது என்பதுதான் அரசின் நரி தந்திரமா?
பல திணிப்பு முயற்சிகளைபோல் இதுவும் தோல்வியில் முடிவதே சிறப்பானதாகும். உலக அரங்கில் இந்தியனாக பெருமைபட இந்தி மொழியைவிட இந்தியன் என்ற உணர்வும் தாய் மொழி வழி ஞானமும் போதுமானதே என்பதை ஆட்சியளர் உணருவதே ஒற்றுமைக்கான நீரோட்டாமாகும்.
No comments:
Post a Comment