Monday 8 May 2017

பாரதீய ஜனதா திரைபடத்தில் அதிமுக நடிகர்களா!!!

தற்போதைய தமிழக சூழ்நிலையில் பாரதீய ஜனதா எப்படி அதிமுக வை கையில் எடுத்து விளையாட முடியும்??? ஏன்???

தமிழகத்தில் 1.49 கோடி உறுப்பினர்களை கொண்ட தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து கொண்டிருக்கிற தனிப்பெரும் திறன் கொண்ட கட்சி. சுமார் 135/234 MLA வையும், 50 க்கும் மேற்பட்ட MP யினை கொண்ட தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளது. இதனை எவ்வாறு அசைத்து பார்க்க முடியும்?


பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு இரண்டு வழிகளே உள்ளது. 
  • ‌கரை படிந்த கைகள் = இதன் மூலம் மிரட்டி பணிய வைத்தல்.‌
  • தகுதியற்றதலைமை.


இதில் இரண்டும் இல்லையென்பதே தற்போதைய அரிய தருணம். தகுதியான தலைமை இருந்தால் எதையும் மாற்றவும், மறுக்கவும் முடியும் என்பதற்கு தற்போதைய நாடகம் உதாரணமே. கூட்டாட்சி கோட்பாடுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களும் உயர்வானவர்களாக சட்டம் பார்க்கிறது. இவ்வளவு காலம், அதிமுக தலைமையின்(ஜெயலலிதா) அதிகாரமானது எப்படியிருந்தது என்பதை சில நிகழ்வுகளிலே அறிய முடியும்.

  • பிரதமர் மோடி ஜெயலலிதாவை சென்னை போயஸ் கார்டனில் சந்தித்தது.
  • நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜெயலலிதாவை சென்னை போயஸ் கார்டனில் சந்தித்தது.‌ மேலும் தமிழகம் வரும் பல மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவை நேரடியாக சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தது மற்றும் பலருக்கு அப்பாய்ண்ட்மெண்ட் மறுத்ததும் மறைக்க இயலாது.
  • டெல்லி பயணம் என்றாலே மத்திய அமைச்சர் முதல் பல பிரபலங்கள் சந்திப்பிற்காக அப்பாயிண்ட்மண்டுக்காக காத்துகிடப்பார்கள்.
  • ஜெயலலிதா சார்ந்த நிகழ்வுகளுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள் என பல காண முடிந்தது.
ஏன்?


ஒரே கல்லில் பல மாங்காய் என்பது நிதர்சணம். குடியரசு தேர்தல் அல்லது குடியேற்றம் வரை மட்டுமே திரைபடத்தின் நீளம். பின் திரையிடலாம் அல்லது மறைவிடமும் செய்யலாம். இப்பொழுது நடக்கும் அரங்கேற்றம் Trailer தான். முழு பட பார்ப்போம் விரைவில்.

சில துளிகள்....

  • ‌அதிமுக வில் பல அணிகள் இருப்பினும், அனைத்திலும் மன்னையின் கரம் எப்போது வேண்டுமென்றாலும் ஓங்கலாம். காரணம், அதிமுக வில் சசிகலா அதிகாரம் இன்று வந்ததல்ல. MGR நோய்வாய்ப்பட்ட காலமுதலே ஊடுருவியதே. அன்றிலிருந்து இன்று வரை, ஜெயா என்னும் திரை மறைவில் சசிகலாவே எல்லாம். ஜெயலலிதாவின் எல்லாமுமாக அரணாய் ஏதோ ஒரு வழியில் திகழ்ந்தனர். உதாரணம், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்து வழக்குகளையும் பார்த்தால் தெளிவு பெறலாம்.‌
  • EPS தனது முதலமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டார் எனலாம். இதற்கு கேரளா ஆளுநரின் வளமான மத்திய உறவும் காரணம் எனவும் தகவல். அதிகாரமென்பது, வளமான மக்கள் ஆட்சியல்ல. பழிவாங்குதல் மற்றும் பணிதலே.
  • ஆளுநரா? பத்திரிக்கையாளரா? என பார்க்கும் போது, மத்திய அரசிற்கு கோழி எதுவாயினும் குழம்பு சுவையாக இருந்தால் போதுமே என்ற வகையில் உள்ளது.
  • யாரெல்லாம் கரை படிந்தார்கள் எப்படி என்றெல்லாம் அழுத்தமாக எழுதலாம். ஆனால் கால விரயமே. எழுதப்பட்ட முடிவினை நோக்கி தீர்மானிக்கப்பட்ட பாதையில் சூழலுக்கேற்ற கதாபாத்திர மாற்றத்துடன் அரசியல்வாதிகளின் திரைபட அரங்கேற்றம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.


இவையாவும் கடந்த சில நாட்களில் நடந்த மாநில மற்றும் மக்கள் சார்ந்த உரிமை பிரச்சினைகளில் அரசின் நிலைபாடுகளைக்கொண்டு தீர்மானிக்கப்பட்டது.


- கவியரசன் தங்கப்பன்


No comments:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து ...